Wednesday, April 11, 2012

டைட்டானிக் - புதைந்த வரலாறு













உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது.
1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரமாண்ட கப்பல்:
டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல். 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.
சம்பவத்தன்று...
1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.
வியாபாரமான டைட்டானிக்:
விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.
1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.
டைட்டானிக் 2:
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

Friday, January 20, 2012

இந்திய ராணுவம்

இந்திய பாதுகாப்பு படைகளில், தரைப்படையே (ராணுவம்) பெரியது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள், அமைதியை நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை இவற்றின் பணி. இது பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ராணுவ தலைமையகம் டில்லியல் உள்ளது. 2010ம் ஆண்டு ஐ.ஐ.எஸ்.எஸ்.,(இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டிராடர்ஜிங் மேனேஜ்மென்ட்) எடுத்த கணக்கெடுப்பின் படி, 1,129,900 பேர் செயல் நிலையிலும், 960,000 பேர் இருப்பு நிலையிலும் உள்ளனர். இந்திய ராணுவம், உலக அளவில் இரண்டாவது பெரிய தரைப்படையைக் கொண்டது. இந்திய ராணுவ தலைமை தளபதி, புனேவைச் சேர்ந்த விஜய் குமார் சிங்.

இந்திய ராணுவம் 6 படைப்பிரிவுகளை கொண்டது. அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு படைப்பிரிவுகளை வழிநடத்துவதால் இவற்றை "கட்டளையகங்கள்' எனவும் அழைப்பர். "ஸ்டிரைக்', "ஹோல்டிங்', "மிக்ஸ்டு' என மூன்று வகை பிரிவுகள் உண்டு.
* மத்திய படைப் பிரிவு:
இது, உ.பி.,யில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் (கமாண்டர் ஆப் சீப் - ஜி.ஓ.சி.,) ஓம் பிரகாஷ்.
பிரிவு I:
1965ம் ஆண்டு துவங்கப்பட்டது இப்பிரிவு. அதே ஆண்டு நடந்த இந்தியா-பாக்., போரில் இப்படையின் பங்கு அதிகம். இது சமீபத்தில் தென்மேற்கு படைப்பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் சந்த்'.
* கிழக்கு படைப்பிரிவு:
கோல்கட்டாவை தலைமையகமாக கொண்டது. இதன் கீழ் மூன்று படைப்பிரிவுகள் அடங்கும். இதன் தலைவர் குல்திப் சிங் ஜம்வால்.
பிரிவு III :
1915ம் ஆண்டு, முதலாம் உலகப்போரின் போது வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட இந்த படை, இரண்டு உலகப் போரிலும் பங்கேற்றது. 198ல் இருந்து நாகலாந்தில் உள்ள திமாபூரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் என்.கே.சிங்.
பிரிவு IV:
1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பிரிவு அசாமில் உள்ள தெஸ்பூரை தலைமையகமாக கொண்டுள்ளது. இதன் தற்போதைய தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.கப்ரா.
பிரிவு XXXIII :
மேற்கு வங்கத்தில் சிலிகுரி என்ற இடத்தை தலைமையகமாக கொண்ட இப்பிரிவு 1962ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் தற்போதைய தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் சி.கே.எஸ்.சாபு.
* வடக்கு படைப் பிரிவு:
காஷ்மீரில் உள்ள உதம்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த படைப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன. இதன் தலைவர் ஹர்சரண்ஜித் சிங் பனாக்.
XIV பிரிவு:
ஜம்முவில் உள்ள லே நகரை தலைமையகமாக பெற்ற இந்த பிரிவு 1999ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின் அமைக்கப்பட்ட பிரிவு இது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ரேமண்ட் ஜோசப் நோரோன்ஹா.
XV பிரிவு:
1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரிவு ஜம்முவில் உள்ள ஸ்ரீநகரை தலைமையகமாக கொண்டது. இதன் தற்போதைய படைத்தளபதியாக அமர்ஜித் சிங் சேகோன் இருக்கிறார்.
XVI பிரிவு:
1972ம் ஆண்டு ஜம்முவில் உள்ள நக்ரோடாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த பிரிவின் தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' தெஜ் குமார் சப்ரூ.
* தெற்கு படைப்பிரிவு:
1895ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவானது, சுதந்திரத்தின் போது இந்திய மாகாணங்கள் பிரிக்கும் போது முக்கிய பங்கு வகித்தது. தவிர, 1961ல் கோவாவை இணைக்கும் போதும், 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் சிறப்பாக செயல்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள புனேயை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) நோபல் தம்புராஜ்.
XII பிரிவு:
1987ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரிவு, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரை தலைமையாக கொண்டது. இதன் தற்போதை படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' சமீர் பால் சிங் தில்லான்.
XXI பிரிவு:
1990ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பிரிவு, மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலை தலைமையகமாக கொண்டது. இதன் தற்போதை படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ராஜேந்தர் சிங்.
* தென்மேற்கு படைப்பிரிவு:
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு 2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவு, இந்திய படைப்பிரிவுகளில் சமீபத்தில் துவங்கப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) பர்மேந்திர குமார் சிங்.
I பிரிவு:
1965ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. அந்த ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்த படையின் பங்கு அதிகம். இது சமீபத்தில் மத்திய படைப்பிரிவிலிருந்து இந்த பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' பிரகாஷ் சந்த்.
X பிரிவு:
1970ம் ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இந்த பிரிவானது, பஞ்சாப்பில் உள்ள பாதின்டாவை தலைமையகமாக கொண்டுள்ளது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' சஞ்சீவ் ரா.
* மேற்கு படைப்பிரிவு:
1947ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த படைப்பிரிவு, அரியானா மாநிலத்தில் உள்ள சந்திர்மந்திரை தலைமையிடமாக கொண்டது. இதன் கீழ் மூன்று பிரிவுகள் உள்ளன. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) தல்ஜித் சிங்.
II பிரிவு:
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவை தலைமையிடமாக கொண்ட இந்த பிரிவு 1971 லிருந்து பயன்பாட்டில் <உள்ளது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ஏ.எஸ்.கப்வால்.
IX பிரிவு:
இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசீலா பகுதியை தலைமையாக கொண்டு 2005ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்திய ராணுவத்தின் இளைய படைப்பிரிவு இது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ஏ.கே.சவுத்ரி.
XI பிரிவு:
பஞ்சாப்பில் உள்ள ஜலாந்தரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த பிரிவு 1948ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' முனிஸ் சிபல்.
மேற்கூறிய படைப்பிரிவுகளை தவிர, இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் பயிற்சி அளிக்கும் படைப்பிரிவு உள்ளது.

Saturday, December 17, 2011

பெர்முடா முக்கோணம்.. ஓர் அதிசயம்

புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு, நிலாவில் நீர் கண்டுபிடிப்பு, இரட்டை சூரியன் கண்டுபிடிப்பு என தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நம் விஞ்ஞானிகள், நீண்ட காலமாக ஒரு விஷயத்தை பற்றிய ஆராய்ச்சியை கையில் எடுக்க பயப்படுகின்றனர். அது "பெர்முடா முக்கோணம்'. இதை சாத்தான் முக்கோணம் என்றும் அழைப்பார்கள்.
பெர்முடா முக்கோணம்:
வட அட்லாண்டிக் கடல் பகுதியில், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு, கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக்கின் கிழக்கு பகுதியிலிருந்து அசோரஸ் வரை
உள்ள பகுதிகளை இணைத்தால் முக்கோணம் போன்ற தோற்றம் கிடைக்கும். இது பெர்முடா முக்கோணம். ஆனால், மேலைநாட்டு எழுத்தாளர்கள் புளோரிடா கடற்கரை, சான் ஜூன், போர்ட்டோ ரிகா மற்றும் பெர்முடாவின் மத்திய அட்லாண்டிக் தீவு ஆகியவை இணைந்த பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைப்பார்கள். இந்த பகுதியில் செல்லும் கப்பல்கள், விமானங்கள், படகுகள் அனைத்தும் மாயமாய் மறைகின்றன என்ற மர்ம ங்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீரிணைப்பின் தெற்கு பகுதியில் தான் விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது.
பயமுறுத்தும் சம்பவங்கள்:
1872 ஆம் ஆண்டு மேரி செலஸ்டி என்ற கப்பல் மர்மமான முறையில் மறைந்தது முதல் சம்பவமாக கருதப்படுகிறது. 1918ஆம் ஆண்டு, "யு.எஸ்.எஸ்., சைக்ளோப்ஸ்' என்ற கப்பல் 309 ஊழியர்களுடன் மறைந்தது. 1945ஆம் ஆண்டு பிளைட் 19 என்ற போர் விமானம் இந்த பகுதியில் பறக்கும் போது காணாமல் போனது. 1948ஆம் ஆண்டு டக்ளஸ் டிசி-3 என்ற பயணிகள் விமானம் மியாமி நோக்கி பறந்தது. ஆனால் செல்லும் வழியில் விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இதில் பயணம் செய்த 32 பேரின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதே வருடம் அசோரஸிலிருந்து பெர்முடா சென்ற விமானமும், ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் சென்ற பயணிகள் விமானமும் காணாமல் போனது. இதை போல் இன்னும் சில விமானங்களும் கப்பல்களும் இந்த பகுதியில் தொலைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மேற்கூறிய எந்த சம்பவத்திற்கும் போதிய ஆதாரமும், உறுதியான விளக்கங்களும் தரப்படவில்லை.
மறுக்கும் லேரி:
அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகரான லாரன்ஸ் டேவிட் கூச் என்பவர், தான் எழுதிய "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி: சால்வ்டு' என்ற புத்தகத்தில், பெர்முடா முக்கோணம் தொடர்புடைய செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகள், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த எழுத்தாளர்கள் கற்பனையாக எழுதியது என்றார். காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெப்பமண்டல புயல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இயல்பு. காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்களின் தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள், சில மாதம் கழித்து அந்த கப்பல் மீண்டு வந்துவிட்டால் அந்த தகவல்களை பதிவு செய்வதில்லை. என்று தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஜப்பானிலும் "பேய்கடல்' :
பூமியில் பெர்முடா முக்கோணத்தின் மறுமுனையில் ஜப்பான் நாட்டின் தென் கிழக்கு கடற்பகுதி உள்ளது. டோக்கியாவிலிருந்து 100 கி.மீ., தொலைவிலுள்ள மியாகி தீவில் இந்த பகுதி அமைந்துள்ளது. இதை சாத்தான் கடல் என்றும் டிராகன் முக்கோணம் என்றும் அழைப்பார்கள். காரணம் இந்த பகுதியை தாண்டி செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களும் மாயமாகின்றன. இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட போது காந்த மாறுபாடு (மேக்னடிக் வேரியேஷன்) குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விபத்துகள் நடந்திருக்கும் என்றும் பெர்முடா முக்கோணப் பகுதியில் ஏற்படும் சம்பவங்களுக்கும் இது தான் காரணம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெர்முடா முக்கோணமாக கருதப்படும் பகுதியில் அதிகமான கப்பல் போக்குவரத்து நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினமும் சரக்கு மற்றும் சொகுசு கப்பல்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றன. அதே போல், பயணிகள் மற்றம் வர்த்தக விமானங்கள் புளோரிடா தீவு பகுதிகளுக்கு இடையில் சென்று வருகின்றன. பெர்முடா முக்கோணம் தொடர்பான மர்மங்களும். கதைகளும் எழுத்தப்பட்டு வருகின்றன.

Thursday, May 5, 2011

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்........ஷ்ஷ் அப்பா!! சம்மர் வந்தாச்சு...

ஒரு வழியாக கோடைகாலம் துவங்கி விட்டது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. கோடைக் காலத்தில் "இதைச் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும்" "அதைச் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்' என்ற ஆலோசனைகள் நம்மைச் சுற்றும். ஆனால் வெப்பத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்களுக்காக இங்கு சில "நச் டிப்ஸ்'கள்...
* வெயிலில் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் உடனடியாக ப்ரிட்ஜை திறந்து கடகடவென கூல் வாட்டர் குடிக்க நன்றாக இருக்கும். ஆனால், அது பெரும் தவறு . எனவே, கொஞ்சம் "ரிலாக்ஸ்' ஆகிவிட்டு தண்ணீர் பருகுங்கள். மேலும் பிரிட்ஜ் தண்ணீரால் ஜலதோஷம், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். அதைவிட, மண்பானையில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இயல்பாகவே அந்த நீர் குளிர்ச்சி அடைவதால், கெடுதல் எதுவும் இருக்காது.
* குழந்தைகள், கோடையைக் கொண்டாடி விளையாடும்போது, அவர்கள் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் (டிஹைட்ரேஷன்). தாகம் எடுத்தாலும், விளையாட்டு மூடில் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்களை தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம். குளுக்கோஸ் நீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
* தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
* இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
* எலுமிச்சைப் பழ ஜூஸ் மற்ற அனைத்தையும் விட சிறந்தது. ஒரு பழத்துக்கு அரை லிட்டர் நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
* கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
* அளவில் சிறியதாக இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு உகந்தது. வைட்டமின்- "சி' அதிகமாக உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
* ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
* வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த, வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன. உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள் உதவும்.
* மாம்பழம், பலாப்பழம் போன்றவை அதிகமாக கிடைக்கும். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் – குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் <<உண்பதை தவிர்க்கவும்.
* மதிய நேரத்தில் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டாலும், இரவில் லைட்டாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து தள்ளி வைக்கும்.
* எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்ற அயிட்டங்களுக்கு தூரம் நிற்பது வயிறு, மனது, பர்ஸ் என அனைத்துக்கும் நல்லது.

Thursday, March 10, 2011

உலக கோடிஸ்வரர்கள் பட்டியல்!

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார். 9வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியலை காண்போம்.
* கார்லோஸ் சிலிம் (மெக்சிகோ) - 74 பில்லியன் டாலர்கள்




* பில்கேட்ஸ் (அமெரிக்கா) - 56 பில்லியன் டாலர்கள்





* வாரென் பப்பெட் (அமெரிக்கா) - 50 பில்லியன் டாலர்கள்




* பெர்னார்டு அர்னால்டு (பிரான்ஸ்) - 41 பில்லியன் டாலர்கள்




* லார்ரி எல்லிசன் ( அமெரிக்கா) - 39.5 பில்லியன் டாலர்கள்




* லெட்சுமி மிட்டல் (இந்தியா) - 31.20 பில்லியன் டாலர்கள்




* அமென்சியோ ஆர்டிகா ( ஸ்பெயின்) - 31 பில்லியன் டாலர்கள்




* எய்க் படிஸ்டா (பிரேசில்) - 30 பில்லியன் டாலர்கள்





* முகேஷ் அம்பானி (இந்தியா) - 27 பில்லியன் டாலர்கள்




* கிறிஷ்டி வால்டன் (அமெரிக்கா) - 26.5 பில்லியன் டாலர்கள்

Friday, February 25, 2011

"ரோபோகாப்'பை போல் "ரோபோசெப்'

மனிதனின் அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று ரோபோ. வேலை பளுவை குறை ப்பதற்காகவும், வேகமாக வேலையை முடித்துக் கொல்வதற்காகவும் கண்டு பிடிக்கப்பட்ட இந்த ரோபோக்களின் பயன்பாடு விஸ்தரித்துக் கொண்டே வருகிறது. ஷாங்காயில் இருக்கும் ஒரு உணவகத்தில் ரோ‌போக்‌கள் உணவு தயாரித்து பரிமாறுகின்றன. 3 நிமிடங்களில் அசாதரணமாக உணவை தயாரித்து வாடிக்கையாளர்கள் பரிமாறி அசத்தி பருகின்றன. இந்த ரோபோக்களின் விலை என்னவோ சற்று அதிகம் தான். ஒரு ரோ‌போ 30,350 டாலர் என்கிறது ஓட்டல் நிர்வாகம். 2010ம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போவில் இந்த ரோபோக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் "பேஸ்புக்"


எகிப்தில், பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் பெய‌ரை சூட்டி அதற்கு பெருமை சேர்த்துள்ளனர் எகிப்து தம்பதியினர். எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஹோஸ்னி முபாரக், அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது ஆட்சியில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நாட்டில் நிகழும் நிகழ்ச்சியை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை தடை செய்யும் பொருட்டு, எல்லா தொலை தொடர்பு சேவையையும் எகிப்து அரது தடை செய்தது. இந்நிலையில், பேஸ்புக் மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு பேருதவி செய்தது. இதனையடுத்து, 18 நாட்கள் கிளர்ச்சிக்குப் பிறகு, ஹோஸ்னி முபாரக்கின் கட்டுப்பாட்டிலிருந்து எகிப்து விடுதலை பெற்றது. இந்த மக்கள் வெற்றிக்கு பேஸ்புக் பெரும் பங்காற்றியது. இந்நிலையில், பேஸ்புக்கை கவுரவிக்கும் வகையில், எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் என்று எகிப்து தம்பதி பெயர் வைத்துள்ளனர்.